மயிலாடுதுறை அடுத்த குத்தாலம் பகுதி மாதிரிமங்கலம் மெயின்ரோட்டை
சேர்ந்தவர் சாவித்திரி (42). இந்தநிலையில் இவரது மகளின் திருமணம் வருகிற
30-ந்தேதி நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதையொட்டி இவர் தனது மகன்
பிரபாகரனுடன் பத்திரிகை கொடுக்க மொபட்டில் சென்றார்.
அப்போது சாவித்திரி மயக்கமாக இருப்பதாக கூறி மகன் பிரபாகரனை மொபட்டை நிறுத்த சொன்னார். அவர் வண்டியை நிறுத்துவதற்குள் சாவித்திரி நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் சாவித்திரிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரை சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி சாவித்திரி இறந்தார். இதுகுறித்து குத்தாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
0 comments:
Post a Comment